பல்லவி
ரே மானஸ சிந்தய ஸ்ரீ ராமம்
சரணம்
சரணம் 1
ஸாகேத நக3ர நாது2னி
ஸமான ரஹித மா வருனி (ரே)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ரே மானஸ/ சிந்தய/ ஸ்ரீ ராமம்/
ஏ மனமே/ சிந்திப்பாய்/ ஸ்ரீ ராமனை/
சரணம்
சரணம் 1
ஸாகேத/ நக3ர/ நாது2னி/
சாகேத/ நகர/ நாதனை/
ஸமான/ ரஹித/ மா/ வருனி/ (ரே)
நிகர்/ அற்ற/ மா/ மணாளனை/ ஏ மனமே...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
மேற்கோள்கள்
2 - இளா - ‘பூமி அல்லது பூதேவி’ நோக்கவும். மேற்கொண்டு விவரங்களுக்கு, பாகவத புராணம், 9-வது புத்தகம், முதல் அத்தியாயம் நோக்கவும்.
3 - வினதா தனயார்தி - கருடனின் துயர். கருடன், சுபர்ணன் மற்றும் அருணன் ஆகியோர் வினதையின் மைந்தர்கள். பாம்புகளிடம் அடிமையாகிய, தனது தாயார், வினதையினை விடுவிப்பதற்காக, கருடன், அமிழ்து திருடிக்கொண்டு போகையில், இந்திரன், அவன்மீது, தனது வஜ்ராயுதத்தினை ஏவினான். தியாகராஜர், இந்த நிகழ்ச்சியைக் குறிப்பிடுவதாகக் கொள்ளலாம்.
Top
கருடனைப் பற்றிய விவரங்கள் (invoke ‘garuDa’).
மகாபாரதத்தில் ஆஸ்திக பருவம், ஆதி பருவத்தில் கருடனைப் பற்றிய அனைத்து விவரங்களும் காணலாம்.
6 - சித3ம்ப3ர - சித்தினை ஆடையாக உடையோன் - 'சிதம்பர நடராஜரைப் பற்றிய விவரங்கள்' நோக்கவும்.
Top
விளக்கம்
1 - கலா த4ர - இது, பிறையணியும் சிவனையும், பிறைகளை உடைய சந்திரனையும் குறிக்கும். இவ்விடத்தில் இது சந்திரனைக் குறிக்கும்.
4 - ஸு1பா4கருனி - எல்லா புத்தகங்களிலும் இங்ஙனமே கொடுக்கப்பட்டுள்ளது. இச்சொல்லினை 'ஸு1ப4+ஆகருனி' என்று பிரித்து 'மங்களத்தின் மூலம்' என்று பொருள் கொள்ளலாம். சில புத்தகங்களில், இதற்கு, 'மங்கள உருவத்தோன்' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. அத்தகைய பொருள் கொள்ள, இது 'ஸு1ப4+ஆகாருனி' என்றிருக்கவேண்டும்.
5 - தி3க3ம்ப3ர - விண்ணாடையோன் - தியாகராஜர், தமது 'ஸீதா வர' என்ற தேவகாந்தாரி கீர்த்தனையில் இராமனை 'ஆகாஸ1 ஸ1ரீரமு ப்3ரஹ்மமு' அதாவது 'ஆகாயத்தினை உடலாக உடைய பிரமம்' என்று கூறுகின்றார். இது பரம்பொருளின் இலக்கணமாகும்.
Top
வினதை மைந்தன் - கருடன்
திகம்பரன் - விண்ணாடையோன்
சிதம்பரன் - சித்தினை ஆடையாகவுடையோன்
(இவை பரம்பொருளின் இலக்கணங்கள்)
Top